கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது: அமைச்சர் ஜெயக்குமார்

 

கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது: அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் மதுவை கொண்டுவந்ததே திமுகதான். முன்னாள் முதல்வர் ராஜாஜி எவ்வளவோ கெஞ்சிய போதும் திமுக மதுவை கொண்டுவந்தது. 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் தமிழக தீர்க்கமாக உள்ளது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. உடனடியாக மதுக்கடைகளை மூட முடியாது. படிப்படியாக மூடப்படும். மேலும், அவர் பேசுகையில், உலகம் முழுவதும் திருக்குறளை பதியவைத்தால் பிரச்னைகள் எதுவும் இருக்காது. அதிமுக ஆட்சி நீடிக்க திமுகவே விரும்புகிறது என்றார்.