கள்ளச்சாரயத்தை அருந்தியதால் விபரீதம்;14 பேர் பலி!

 

கள்ளச்சாரயத்தை அருந்தியதால் விபரீதம்;14 பேர் பலி!

உத்திரபிரதேசத்தில் கள்ளச்சாரயம் அருந்தியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 உட்பட 14 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரபிரதேசத்தில் கள்ளச்சாரயம் அருந்தியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 உட்பட 14 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் தன்வீர் சிங் என்பவர் மதுபானக் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு மது அருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், மற்றும் சில இளைஞர்களும் கடைக்கு வந்துள்ளனர். கடையில் இருந்த கள்ளச்சாரயத்தை அவர்கள் அருந்தியதாக கூறப்படுகிறது. அவர்களில் 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். உடற்கூறு ஆய்வில், அவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் அருந்தியிருந்தது தெரிய வந்தது.மேலும் சிலருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மதுக்கடையின் குத்தகை தாரர் தன்வீர் சிங் சட்டவிரோதமாக சாராய ஆலை ஒன்றை நடத்தி வருவதும், அங்கு கள்ளச்சாராயத்தை காய்ச்சி, விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் மதுக்கடைக்கும் சீல் வைத்தனர்.