கள்ளக்குறிச்சி அருகே ஏழுமலையான் கோவில்: 5 ஏக்கர் நிலபத்திரத்தை தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்த முதல்வர் !
முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை குடும்பத்துடன் சென்றார். அப்போது அங்கிருந்த தேவஸ்தான அதிகாரிகள் அவரை முறையாக வரவேற்றனர். மேலும் அவர் விஐபி வரிசையில் நின்று ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு ரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து ரதசப்தமி உற்சவத்தின் முதல் வாகனமான ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவையில் கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு கள்ளக்குறிச்சி அருகே ஏழுமலையான் கோயில் கட்ட வழங்கிய 5 ஏக்கர் நிலத்தின் ஆவணத்தைத் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.