கள்ளக்காதல் விவகாரம்: மனைவியை கொலை செய்ய இரண்டு நாட்களாக ஒத்திகை பார்த்த கணவர்: திட்டமிட்டபடி நடந்த கொடூரம்!

 

கள்ளக்காதல் விவகாரம்: மனைவியை கொலை செய்ய இரண்டு நாட்களாக ஒத்திகை பார்த்த கணவர்: திட்டமிட்டபடி நடந்த கொடூரம்!

மனைவியை கொலை செய்ய கணவர் இரண்டு நாட்களாக ஒத்திகை பார்த்து , பின்னர் திட்டமிட்டபடி கொலை செய்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி : மனைவியை கொலை செய்ய கணவர் இரண்டு நாட்களாக ஒத்திகை பார்த்து , பின்னர் திட்டமிட்டபடி கொலை செய்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மடுகரையை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ராஜசேகர் –  கங்கா தம்பதியினர் காதலித்து சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கங்காவை மர்மநபர்கள் சிலர் அதிகாலை சாலையில் வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். சபாநாயகர் வீட்டின் அருகே இந்த கொலை சம்பவம் நடந்ததால், 
அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கங்காவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்துகங்காவின் கணவர் ராஜசேகரிடம், போலீசார்  விசாரித்தனர். அப்போது கங்கா கொலை குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.அதில், கங்காவுக்கு  பல ஆண்  நண்பர்களுடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜசேகர், கங்காவை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனாலும் கங்கா தொடர்ந்து இதே செயலை செய்து வந்தது ராஜசேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து மனைவி கங்காவிடம் குழந்தைகளின் எதிர்காலத்தைச்  சேர்ந்து வாழலாம் என்று கூறி வரவழைத்துள்ளார். இதையடுத்து கங்கா மீண்டும் தன் ஆண்  நண்பர்களுடன் செல்போனில் பேசியுள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, கங்காவின் செல்போனைப் பறித்து ராஜசேகர் உடைத்துப் போட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மனைவி காலையில் பால் வாங்க தனியாக செல்லும் தகவலை நண்பர்களுக்குத் தெரிவித்து, தீர்த்து கட்ட திட்டம் வகுத்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, கங்கா பால் வாங்க செல்லும் போது இரண்டு நாட்கள் ஒத்திகை பார்த்த கொலையாளிகள், திட்டமிட்டபடி வியாழக்கிழமை கங்காவை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். தான் வீட்டிலிருந்தால் போலீசாருக்கு சந்தேகம் வராது என்று எண்ணிய ராஜசேகர் போலீசார் விசாரணையில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.