கள்ளக்காதல் விவகாரம் ! குடும்பமே தீயில் கருகி பலி !

 

கள்ளக்காதல் விவகாரம் ! குடும்பமே தீயில் கருகி பலி !

கள்ளக் காதல் விவகாரத்தில் ஒரு குடும்பமே தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் தலவட்டி கிராமத்தில் அருண்குமார், மனைவி லதா மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் மகள் வசித்து வந்தனர். தனியார் பேருந்தில் பணிபுரியும் அருண்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளஉறவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

fight

இந்நிலையில் நேற்று கணவன், மனைவிக்கிடையே கள்ளக்காதல் விவகாரத்தில் மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. இதை பார்த்த அவர்களது மகள் பயந்து போனார். தகராறு எல்லை மீறி செல்ல குடும்பமே தற்கொலை செய்து கொள்ள விபரீத முடிவு எடுத்தது. இதையடுத்து மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தம்பதி தங்கள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டது.

women

இதையடுத்து 3 பேரும் தீயின் தாக்கம் காரணமாக அலறி துடித்தனர். சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். 3 பேரும் தீயில் கருகுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தீயை அணைத்து அருண்குமார், அவரது மனைவி லதா மற்றும் மகள் அம்ருதா ஆகியோரை மீட்டு இரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

couple

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்துக்கும், மருத்துவமனைக்கும்  சென்று விசாரணை நடத்தினார்கள்.