கள்ளக்காதல் விவகாரம் – காவல்துறை ஆய்வாளர் மிரட்டுவதாக நடிகர் தாடி பாலாஜி புகார்!?

 

கள்ளக்காதல் விவகாரம் – காவல்துறை ஆய்வாளர் மிரட்டுவதாக நடிகர் தாடி பாலாஜி புகார்!?

நடிகர் தாடி பாலாஜி காவல்துறை ஆய்வாளர் மனோஜ் குமார் தன்னை மிரட்டுவதாகவும் அவரை  சஸ்பெண்டு செய்ய வேண்டும் கூறியுள்ளார்.

சென்னை: நடிகர் தாடி பாலாஜி காவல்துறை ஆய்வாளர் மனோஜ் குமார் தன்னை மிரட்டுவதாகவும் அவரை  சஸ்பெண்டு செய்ய வேண்டும் கூறியுள்ளார்.

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதையடுத்து இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.அதன் பின்னர் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல் அதற்காக பாலாஜி ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்றும் நித்யா கண்டிஷன் போட்டார்.

thadi balaji

இதையடுத்து சமீபத்தில் மாதவரம் காவல் நிலையத்தில் நித்யா தனது கணவர் பாலாஜி பற்றி மீண்டும் ஒரு புகார் அளித்தார். அதில், தன்னையும், தனது மகளையும் மிரட்டுவதாகவும், குடித்துவிட்டு நண்பர்களுடன் வந்து கதவு, ஜன்னல்களை உடைத்து தொல்லை கொடுப்பதாகவும், கைப்பேசியில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் தாடி பாலாஜி, நித்யா மனோஜுடன் சேர்ந்து தனது குழந்தையின் வாழ்க்கையைச் சீரழித்து வருகிறார். என் மன உளைச்சலுக்கு உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் தான் காரணம். என் குடும்பத்தைப் பாழாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமாரை காவல்துறை கமிஷனர் இடைநீக்கம் செய்ய வேண்டும். 

thadi balaji

என் குழந்தைக்கு என்ன தேவையோ அதை ஒரு தந்தையாக செய்ய நான் தயார். மகளை நல்ல பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும். 

நித்யா தேர்தலில் நிற்பேன் என்று சொல்கிறார்,முதலில் வீட்டில் நிற்கட்டும். குடும்பத்தைப் பார்க்க முடியாத நித்யாவுக்கு நாட்டை பற்றி என்ன தெரியும்? அரசியலை பற்றி நித்யாவுக்கு என்ன தெரியும்? அவர் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ள அவர் என்ன முதலமைச்சர் வேட்பாளராகவா நிற்கிறார்? என் வேலை காரணமாக நான் பிஸியாக இருப்பதால் அந்த சுதந்திரத்தை நித்யா தவறாக பயன்படுத்திக் கொண்டார். அதை கேட்டது தவறா?நித்யாவை செயல்பட வைப்பது மனோஜ் தான். 

thadi balaji

என்னுடைய குடும்பம் ஒன்று சேர வேண்டும் என விஜய் டிவிக்கு எந்த நோக்கமும் இல்லை. நித்யா பிக்பாஸில் செய்தது அனைத்துமே நடிப்பு. பிக்பாஸ் செட்டிலிருந்து வந்து நான் என் அம்மா வீட்டிற்கு தான் சென்றேன். நித்யாவை பார்க்கச் செல்லவே இல்லை. நித்யா சொல்வது அனைத்துமே பொய்.

பணதேவைக்காக மட்டுமே என்னிடம் நித்யா பேசினார். என் பிரச்சனை தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்குத் தெரியும். அவரிடம் சொல்லி விட்டுத் தான் செய்தியாளர்களை சந்திக்கவே வந்தேன். நித்யா எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு இருந்தால் வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் எனத் பேசியுள்ளார்.