கள்ளக்காதல் விவகாரம்: கணவனை கொன்று விட்டு 2 ஆண்டுகளாக நாடகமாடிய பெண் கைது!

 

கள்ளக்காதல் விவகாரம்: கணவனை கொன்று விட்டு 2 ஆண்டுகளாக நாடகமாடிய பெண் கைது!

காதலன் உதவியுடன் கணவனை கொன்று புதைத்து விட்டு  கணவனை காணவில்லை என 2 ஆண்டுகளாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்: காதலன் உதவியுடன் கணவனை கொன்று புதைத்து விட்டு கணவனை காணவில்லை என 2 ஆண்டுகளாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி  பகுதியில் சத்திரம் புளியங்குளத்தைச் சேர்ந்த இளையராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளையராஜாவை காணவில்லை என்று அவரது மனைவி முத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

முத்து அளித்த புகாரின் அடிப்படையில் காணாமல் போன இளையராஜாவை  போலீசார் தேடி வந்தனர். அதே போல் மனைவி முத்துவிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முத்துவின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீசார் அவரது தொலைப்பேசி அழைப்புகளையும், அவரையும் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது மணிகண்டன் என்பவருடன் முத்து அடிக்கடி பேசுவதும், முத்துவின் வீட்டிற்கு மணிகண்டன் அடிக்கடி வந்து செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளன. அதில், ‘தனது நண்பர்கள் உதவியுடன் இளையராஜாவை கொலை செய்து விட்டு , உடலை கம்பாளி கிராமத்தில் காட்டுப்பகுதியில் புதைத்ததாக மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது போலீஸுக்கு தன மீது ஏற்பட்ட சந்தேகத்தால்  இளையராஜாவின் உடலை தோண்டியெடுத்து வைகை ஆற்றில் போட்டதாகவும் மணிகண்டன் கூறியுள்ளார். இதையடுத்து, முத்து, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.