கள்ளக்காதல் விவகாரம் : அத்தையை குத்தி கொன்ற இளைஞர்!
May 16, 2020, 08:34 IST1589598295000
இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது .
சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கணேஷ். பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இதுகுறித்து அறிந்த கணேஷின் அத்தை குணசுந்தரி அவரது வீட்டுக்கு வந்து கணேஷை கண்டித்துள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் காய்கறி நறுக்கும் கத்தியால் குணசுந்தரியை கணேஷ் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொளத்தூர் காவல் துறையினர் குணசுந்தரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தப்பியோடிய கணேஷை தீவிரமாக தேடி வரும் போலீசார் இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.