கள்ளக்காதல் பயங்கரம் ; வீடியோ கால் பேசியபடியே தற்கொலை!

 

கள்ளக்காதல் பயங்கரம் ; வீடியோ கால் பேசியபடியே தற்கொலை!

தான் வேலை பார்க்கும் ஜூஸ் கடைக்கு அருகிலுள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். இந்த நிலையில் பாதுஷாவுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் விடுமுறை நாட்களில் பல்வேறு இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். சில நாட்கள் முன்பு பாதுஷாவுக்கும் அவர் காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் பாதுஷாவை சந்திக்க மறுத்து வந்திருக்கிறார்

கேரளமாநிலம் ஆலப்புழாவை அடுத்த ஆலிசேரியைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவருடைய மகன் 24 வயது பாதுஷா. செங்கனாச்சேரியில் ஒரு ஜூஸ்கடையில் பணியாற்றி வந்தார்.இவர் ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவியை விட்டுப் பிரிந்தவர்.

தான் வேலை பார்க்கும் ஜூஸ் கடைக்கு அருகிலுள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். இந்த நிலையில் பாதுஷாவுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் விடுமுறை நாட்களில் பல்வேறு இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். சில நாட்கள் முன்பு பாதுஷாவுக்கும் அவர் காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் பாதுஷாவை சந்திக்க மறுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பாதுஷா தன் காதலிக்கு நேற்று முன்தினம் இரவு தனது லாட்ஜ் அறையில் இருந்து செல்ஃபோனில் வீடியோகால் செய்து இருக்கிறார். 

ஃபோனில் பேசிக்கொண்டு இருந்த போது மீண்டும் வாக்குவாதம் முற்றி இருக்கிறது. இதனால் ஆத்திரமான பாதுஷா’ நான் தூக்குப் போட்டுத் தொங்கப் போகிறேன் பார்’ என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு வீசியோ காலை ஆனில் வைத்தபடியே தூக்குப் போட்டுத் தொங்கி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் ஜூஸ் கடை உரிமையாளருக்கு ஃபோன் செய்து செய்தியைச் சொல்லி இருக்கிறார். 

அவர் உடனே சங்கனாசேரி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் லாட்ஜுக்குப் போனபோது பாதுஷாவின் அறை உள்புறமாகத் தாளிடப்பட்டு இருந்தது.கதவை உடைத்து போலீசார் உள்ளே போனபோது பாதுஷா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார்.உடலைக் கைப்பற்றிய சங்கனாசேரி போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.