கள்ளக்காதலை கண்டித்த மாமியாரை போட்டுத்தள்ளிய மருமகள்! கணவன் இராணுவத்தில், மனைவி சிறையில்…

 

கள்ளக்காதலை கண்டித்த மாமியாரை போட்டுத்தள்ளிய மருமகள்! கணவன் இராணுவத்தில், மனைவி சிறையில்…

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

ராஜஸ்தான் மாநிலம் அருகே உள்ள கிராமத்தில்தான் அரங்கேறியுள்ளது இந்த கொடுமை. கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ வீரரான சச்சினுக்கும், அல்பனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில தினங்களிலேயே சச்சின் ராணுவத்திற்கு சென்றுவிட்டார். அல்பனா அவரது மாமியார் வீட்டிலே வசித்துவந்துள்ளார். கணவர் அருகில் இல்லாததால் அல்பனா, ஜெய்பூரை சேர்ந்த மணீஷ் என்பவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இருவரும் அடிக்கடி வெளியில் ஊர் சுற்றுவது போன்ற சேட்டைகளில் ஈடுபட்டுவந்துள்ளனர். இந்த விவகாரம் அல்பனாவின் மாமியாருக்கு தெரியவர, மருமகளை கூப்பிட்டு அறிவுரை கூறியுள்ளார். 

Murder

இதனால் ஆத்திரமடைந்த அல்பனா, வீட்டில் தனியாக இருந்த மாமியாரின் அறைக்குள் விஷப்பாம்பு ஒன்றை விட்டுள்ளார். அந்த பாம்பு மாமியாரை கடித்து, விஷம் தலைக்கேறியது. இதையடுத்து அல்பனா திட்டமிட்டப்படி மாமியாரும் இறந்துள்ளார். மாமியார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிக்கினார் அல்பனா. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கள்ளகாதலனுடன் சேர்ந்து மாமியாரை கொலை செய்ததாகவும், கிருஷ்ணகுமார் என்பவர் தான் விஷபாம்பை ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் தெரிவித்தார்.