கள்ளக்காதலுக்கு இடையூறு! குழந்தைகளுக்கு விஷம்வைத்து கொன்ற தாய் கைது!!

 

கள்ளக்காதலுக்கு இடையூறு! குழந்தைகளுக்கு விஷம்வைத்து கொன்ற தாய் கைது!!

மேலூர் அருகே, தவறான உறவுமுறைக்கு இடையூறாக இருந்ததாக, இரண்டு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் கள்ளக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையப்பட்டியைச் சேர்ந்த ராகவானந்தம் மற்றும் ரஞ்சிதா தம்பதிகளின் குழந்தைகளான, பார்கவி மற்றும் யுவராஜ் ஆகியோர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அருகே கிடந்த எலி மருந்து கலந்த கேக்கை சாப்பிட்டு உயிரிழந்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்,இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ராகவானந்தன், குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறிய புகாரையடுத்து, கீழவளவு காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தனது தவறான உறவுமுறைக்கு இடையூறாக இருந்ததாக குழந்தைகள் பார்கவி மற்றும் யுவராஜூக்கு, பெற்ற தாய் ரஞ்சிதா எலி மருந்து கலந்த கேக்கை கொடுத்து கொலை செய்து விட்டு, குழந்தைகள் விளையாடும் போது யாரோ வைத்த எலி பிஸ்கட் கலந்த கேக்கை சாப்பிட்டு விட்டு உயிரிழந்ததாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இதனையடுத்து கீழவளவு காவல்துறையினர் தாய் ரஞ்சிதா மற்றும் கள்ளக்காதலனான அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த கல்யாணகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தவறான உறவுமுறைக்காக பெற்றக் குழந்தைகளையே தாய் விஷம் வைத்துக் கொன்றது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.