கள்ளக்காதலி பிரிந்து சென்ற விரக்தி: தந்தையை கடத்திய இளைஞர்; பகீர் ரிப்போர்ட்!?

 

கள்ளக்காதலி பிரிந்து சென்ற விரக்தி: தந்தையை கடத்திய இளைஞர்; பகீர் ரிப்போர்ட்!?

கள்ளக்காதலியின் தந்தையைக் கடத்திய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை : கள்ளக்காதலியின் தந்தையைக் கடத்திய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அயனாவரத்தை  சேர்ந்தவர் வரதன். 20 வயதான இவரது மகள் ஆர்த்திக்கு பிரவீன் என்பவருக்கும் திருமணமாகி குழந்தை ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து பிரவீனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆர்த்தி அவரை விட்டுப் பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். 

love

இதற்கிடையில் ஆரத்திக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாற, ஆர்த்தி சுபாஸுடன்  தனி வீட்டில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும் சுபாஷுடனும் மோதல் ஏற்பட மீண்டும் தாய் வீட்டிற்கே வந்துள்ளார் ஆர்த்தி. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்த்தியின் தந்தை வரதனை சுபாஷ் மது வாங்கி கொடுத்துக் கடத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து ஆர்த்திக்கு போன் செய்த சுபாஷ், ‘உன் தந்தையைக் கடத்தி விட்டேன். என்னுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறினால் உன் தந்தையை விட்டு விடுகிறேன்’ என்று மிரட்டியுள்ளார். 

crime

இதுகுறித்து  அயனாவரம் போலீசில் ஆரத்தி புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  சுபாஷை பெரம்பூர் பகுதியில் வைத்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.