கள்ளக்காதலருடன் மனைவியை பார்த்த கணவன்! பார்த்த இடத்திலேயே இருவரையும் வெட்டியதால் பரபரப்பு

 

கள்ளக்காதலருடன் மனைவியை பார்த்த கணவன்! பார்த்த இடத்திலேயே இருவரையும் வெட்டியதால் பரபரப்பு

கோவில்பட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவில்பட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய  மனைவி மாரியம்மாள். மாரியம்மளுக்கும் , அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்திக்கும் கடந்த பல நாட்களாகவே தொடர்பு இருந்துள்ளது. 

Murder

இந்நிலையில் இன்று அதிகாலை ராமமூர்த்தி, மாரியம்மாளை பார்க்க வந்துள்ளார். மாரியம்மாளும் தனது கணவருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி ராமமூர்த்தியை சந்திக்க சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற அவரது கணவர் சண்முகம் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்தார். பார்த்த இடத்திலேயே இருவரையும்  வெட்டிப் படுகொலையும் செய்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பசுவந்தனை போலீஸார் இரு உடல்களையும் கைப்பற்றி, சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.