கள்ளக்காதலனுடன் மகளுக்கு திருமணம்; 13 வயது மகனை நாய் சங்கிலியால் கழுத்தை நெரித்து கொன்ற தாய்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

கள்ளக்காதலனுடன் மகளுக்கு திருமணம்; 13 வயது மகனை நாய் சங்கிலியால் கழுத்தை நெரித்து கொன்ற   தாய்;  அதிர்ச்சி தரும் சம்பவம்!

விசாரணை நடத்தி எங்களை பிடித்து விட்டனர்’ என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார். 

களியக்காவிளையை அடுத்த மலையடி அல்ல சினாவிளையை சேர்ந்தவர் வசந்தா. 45 வயதான இவரது கணவர் மோகன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் , 13 வயதான லால் மோகன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு லால் மோகன் தூக்க மாத்திரை போட்டுகொண்டு தற்கொலை செய்துகொண்டதாக வசந்தா போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி  வந்தனர். 

ttn

இதையடுத்து வசந்தாவின் கணவர் மோகன், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசாரின் சந்தேக பார்வை வசந்தாவின் மீது செல்ல அவர் தனது 35 வயதான கள்ளக்காதலன் சுபணன் என்பவருடன் சேர்ந்து  மகனை கொன்றது தெரியவந்தது.

tn

  இதுகுறித்து வசந்தா அளித்துள்ள வாக்குமூலத்தில், நான்  சுபணன் என்பவருடன்  தொடர்பில் இருந்து வந்தேன். இதை தெரிந்து கொண்ட என் கணவர் என்னை விட்டு சென்றுவிட்டார். இதனால் நாங்கள் யார்   தொல்லையும் இல்லாமல் இருந்து வந்தோம். ஒருநாள் மகன் லால் மோகன் நாங்கள் தனிமையில்  இருப்பதை  பார்த்து விட்டான். இதனால் அவனை கொல்ல  நினைத்து தூக்க மாத்திரையை வாயில் காட்டாயப்படுத்தி போட்டதுடன், நாய் கட்டும் சங்கிலியால் கழுத்தை நெரித்து கொன்றோம். எங்களின் மீது சந்தேகம் அடைந்த கணவர் மோகன், மகனின் சாவு தொடர்பாக விசாரணை நடத்த பல இடங்களில் மனு கொடுத்து வந்தார். இதனால் நாங்கள் மாட்டிக்கொள்ள வாய்பிருப்பிக்கிறது  என்று பயந்து மூத்த மகளை சுபணனுக்கு திருமணம் செய்து வைத்தால் மகள் வாழ்க்கையை  எண்ணி எதுவும் செய்யமாட்டார் என்று நினைத்து மகளை சுபணனுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி எங்களை பிடித்து விட்டனர்’ என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார். 

ttn

 இதையடுத்து கைது செய்யப்பட்ட வசந்தாவும், கள்ளக்காதலன் சுபணனும் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.