கள்ளகாதலியுடன் கையும் களவுமாக சிக்கிய கணவன்: வெளுத்து வாங்கிய மனைவி; வைரல் வீடியோ!
கள்ளக்காதலியுடன் சிக்கிய பேருந்து ஓட்டுநரை அவரது மனைவி சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிலிப்பைன்ஸ் : கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவனை அவரது மனைவி சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிலிப்பைன்ஸில் கடந்த 7 ஆம் தேதியன்று பெண் ஒருவர் பேருந்தை வழிமறித்தார். பின்பு முன்பக்க ஜன்னல் வழியாக பேருந்துக்குள் ஏறிய அப்பெண் ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதைக்கண்ட பயணிகள் எதற்காக இந்த பெண் ஓட்டுநரை தாக்குகிறார் என்பது தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர்.
அந்தப் பெண், என்னுடன் 12 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, யாரோ ஒருத்திக்காக குடும்பத்தை நாசமாக்க பார்க்கிறாயா? என்று கேட்டு அடித்துள்ளார். அப்போது தான் அந்த பெண் ஓட்டுநரின் மனைவி என்பது அனைவருக்கும் புரிந்தது.
அப்போது அந்த பெண் கணவரின் கள்ளக்காதலை அதே பேருந்தில் வைத்து பார்த்துவிட, அதை நோட்டமிட்ட அவரின் கணவர் கள்ளக்காதலியைத் தப்பித்து ஓடும்படி கூறினார். அந்த பெண்ணும் தன்னுடைய பையை எடுத்து கொண்டு பின்பக்கம் வழியாக தப்பித்து ஓடியுள்ளார். இதையடுத்து பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டு போக்குவரத்து போலீசார் வந்து அப்பெண்ணைச் சமாதானம் செய்தனர். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.