கள்ளகாதலியின் கணவர் மாயம்: நடிகர் லாரன்ஸின் தம்பி தான் காரணமா?!

 

கள்ளகாதலியின் கணவர் மாயம்: நடிகர் லாரன்ஸின் தம்பி தான் காரணமா?!

இளைஞர் ஒருவர் மாயமான விவகாரத்தில், நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: இளைஞர் ஒருவர் மாயமான விவகாரத்தில், நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் உதயசங்கர். இவரது மனைவி தீபிகா.இவர் போரூரில் நடனப்பள்ளி நடத்தி வரும் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வினிடம் நடனம் கற்றுக் வருகிறார். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. 

elwin ttn

இதையடுத்து  உதயசங்கரிடம் இருந்து விவாகரத்து கோரி தீபிகா திருவள்ளூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்நிலையில் உதய சங்கர் திடீரென மாயமாகியுள்ளார். இவர் கடந்த 3ஆம் தேதி சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள அத்தை வீட்டுக்குச் சென்றவர் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்ப வில்லை. 

lawrence brother

இதையடுத்து அவரது தாயார் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், ஆய்வு செய்தலில் உதயகுமார் சிட்லபாக்கத்தில் நடந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.மேலும் மகன் மாயமாகியுள்ளதில் அவரது மனைவி தீபிகா மீதும்,  அவரது நண்பரும் ராகவா லாரன்ஸ் தம்பியுமான  எல்வின் மீதும்  சந்தேகம் உள்ளதாக சாந்தி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் சிட்லபாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராகவா லாரன்ஸின் தம்பி மீது அளித்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.