கள்ளகாதலால் கழிவுநீர் தொட்டியில் சடலமாக கிடந்த பெண்: பதற வைக்கும் உண்மை!

 

கள்ளகாதலால் கழிவுநீர் தொட்டியில் சடலமாக கிடந்த பெண்: பதற வைக்கும் உண்மை!

பெண்ணை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் மறைந்து வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

வேலூர் : பெண்ணை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் மறைந்து வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுலோச்சனா. இவர் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயுள்ளார். இதையடுத்து சுலோச்சனாவை ஒருபுறம் தேடிவர, கிருஷ்ணமூர்த்தியின் சித்தப்பா மகன் ரமேஷ், குடிபோதையில் தான் ஒரு கொலை செய்துவிட்டதாகக் கூறி பாகாயம் போலீசில் சரணடைந்தார். 

murder

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுலோச்சனாவுக்கும் ரமேஷுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ரமேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ள நிலையில் அவர் திருச்சியில் கொத்தனாராக வேலைபார்த்து வந்துள்ளார். இருப்பினும் வாரம் ஒருமுறை சுலோச்சனாவை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து வேலூர், ஓட்டேரி அடுத்த இந்திரா நகர் பகுதியில் சுலோச்சனாவின் மருமகனுக்குச் சொந்தமான வீட்டில் சுலோசனாவை  ரகசியமாகச் சந்தித்து வந்துள்ளார் ரமேஷ். அப்போது தனது பெயரில் உள்ள சொத்துக்களை உன் பெயருக்கு மாற்றித் தருவதாக ரமேஷ் ஆசைவார்த்தை கூறி வந்துள்ளார். 

murder

இந்நிலையில், ரமேஷ்- சுலோச்சனா இருவரும் சம்பவத்தன்று சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது சொத்துக்களை என் பெயருக்கு மாற்றித்தந்தால் தான் இனிமேல் உன்னைச் சந்திப்பேன் என்று ரமேஷிடம் சுலோச்சனா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், அங்கிருந்த இரும்புக் கம்பியால் சுலோச்சனா தலையில் பலமாக அடித்துள்ளார்.  இதில் ரத்த வெள்ளத்தில் சுலோச்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சுலோச்சனாவின் சடலத்தை வீட்டில் உள்ள கழிவறைத் தொட்டியில் வீசி மறைத்து விட்டு ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதை தொடர்ந்து ரமேஷை கைது செய்த போலீசார், சுலோச்சனாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. தகாத உறவால் ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.