கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்: கதறிய மனைவி, மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த கணவன்: சினிமா பாணியில் நடந்த கொடூரம்!

 

கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்: கதறிய மனைவி, மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த கணவன்: சினிமா பாணியில் நடந்த கொடூரம்!

கள்ளகாதலுக்காக மனைவியை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா: கள்ளகாதலுக்காக மனைவியை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா அருகில் உள்ள குருகிராமில் வட இந்திய பெண்கள் கடைப்பிடிக்கும் கர்வா சாத் என்கிற பூஜை நாளான கடந்த மாதம் 27 ஆம் தேதி 8 வது மாடியில் இருந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தி வெளியானது. 

இதையடுத்து பெண்ணின் கணவர் விக்ரம் போலீசாரிடம், ‘ என் மனைவி தீபிகா, நான் நீண்ட ஆயுளுடன் இருக்க விரதம் இருந்தாள். ஆனால் திடீரென்று தற்கொலை செய்துகொண்டாள் என்றார் அந்தப் பெண்ணின் கணவர் விக்ரம். முதலில் நம்பிய போலீசாருக்கு பிறகு வீட்டை சோதனை செய்த போது லேசாக சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் வீட்டில் பொருட்கள் அங்கும் இங்கும் அலங்கோலமாகச் சிதறி கிடந்தன. பின்னர் அவரது அக்கம் பக்கத்து வீட்டினரிடம் விசாரித்ததில் அது தற்கொலை அல்ல, கொலை என்பது உறுதியானது.பின்னர் விக்ரமை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று   விசாரிக்க, வேறு வழியின் உண்மையை ஒப்புக்கொண்டார்.

haryana

குருகிராமில் அன்சால் வாலே வியூ சொசைட்டியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் ஷெஃபாலி பாசின் திவாரி என்பவருடன் விக்ரமுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.இது காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது தீபிகாவுக்கு தெரியவர கணவருடன் சண்டைப் போட்டுள்ளார். இது குடும்பத்துக்குள் பிரச்னையானது

இதற்கிடையே ஷெஃபாலியும் விக்ரமும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதற்கு முன்னதாக, இருவருக்கும் விவாகரத்து வேண்டும். ஷெஃபாலி, தனது கணவரிடம் விவாகரத்து பற்றி கேட்க, அவர் சம்மதம் சொல்லியுள்ளார். ஆனால், தீபிகா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஷெஃபாலி ஏமாற்றமடைந்தார்.

இதனால் தீபிகாவை தீர்த்து கட்டிவிட்டு சத்தம் போடாமல், தற்கொலை என்று நாடகமாடி விடுவோம்  ஷெஃபாலியும்  விக்ரமும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, மனைவி மற்றும் குழந்தைகளை கடந்த மாதம் 24 ஆம் தேதி நானிடாலுக்கு பிக்னிக் அழைத்துச் சென்றார் விக்ரம். அங்கு உயரமான பாறைக்கு அழைத்துச் சென்று தீபிகாவை கீழே தள்ளிவிடுவதுதான் திட்டம். ஆனால், ஓட்டல் ரூமை விட்டு வெளியே வரமாட்டேன் என்று இருந்துவிட்டார் தீபிகா

இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி தன்னுடைய வீட்டின் பால்கனியில் இருந்து தீபிகாவை தள்ளி விட முயற்சி செய்தார் விக்ரம். இதைப் புரிந்து கொண்ட அவர், தனது குழந்தை களுக்காகத் தான் வாழ வேண்டும், என்னை கொன்றுவிடாதே என்று கதறியிருக்கிறார். ஆனால், இந்த கதறலை, விக்ரமின் தகாத உறவு மறைத்துவிட்டது. பால்கனியில் இருந்து பலவந்தமாக அவரைத் தள்ளிவிட்டார் விக்ரம். அலறிபடியே கீழே விழுந்து உயிர் விட்டார் தீபிகா. இதை அக்கம் பக்கத்து வீட்டினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தது போது விக்ரமின் குழந்தைகள் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பிறகு  ஷெஃபாலிக்கு தகவல் தெரிவித்துவிட்டு போலீசில் புகார் செய்திருக்கிறார் விக்ரம். போலீசார், விக்ரம், ஷெஃபாலியின் மொபைல் மெசேஜ், இமெயில் உள்ளிட்டவற்றைச் சோதனை செய்து பார்த்ததில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதையடுத்து விக்ரம், ஷெஃபாலியை  போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.