கள்ளகாதலனுடன் உல்லாசம்… கணவனை தலையணையால் அமுக்கி கொல்ல முயன்ற மனைவி கைது!

 

கள்ளகாதலனுடன் உல்லாசம்… கணவனை தலையணையால் அமுக்கி கொல்ல முயன்ற மனைவி கைது!

இதை அரசல்புரசலாக கேள்விப்பட்ட அண்ணாதுரை பானுவை கண்டித்துள்ளார். இருப்பினும் பானு  தொடர்ந்து சங்கருடன்  தொடர்பிலிருந்துள்ளார்.

சேலம் அரிசிபாளையம் தம்மண்ணன் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை.இவரது மனைவி பானு. இவருக்கும் ரத்தினசாமிபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்ற இளைஞருக்கு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதை அரசல்புரசலாக கேள்விப்பட்ட அண்ணாதுரை பானுவை கண்டித்துள்ளார். இருப்பினும் பானு  தொடர்ந்து சங்கருடன்  தொடர்பிலிருந்துள்ளார்.

tt

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி காலையில் வெளியே சென்றிருந்த அண்ணாதுரை வீட்டிற்கு வந்த போது  சங்கரும் மனைவி பானுவும் படுக்கையறையில் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதை தொடர்ந்து இருவருடனும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  பானுவும் சங்கரும்  அண்ணாதுரையை தலையணையால் அமுக்கிக் கொலை செய்ய முயன்றனர்.  ஆனால் அவர் கூச்சலிட்டுக் கத்தியுள்ளார். இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். 

ttn

இதுகுறித்து அண்ணாதுரை அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த செவ்வாய்ப்பேட்டை போலீசார்,   பானு மற்றும் கள்ளக்காதலன்  சங்கர் இருவரையும்  கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.