கல்வெட்டை தூக்கியடித்து ஆத்திரம்… #ரஜினி_பயத்தில்திமுக

 

கல்வெட்டை தூக்கியடித்து ஆத்திரம்… #ரஜினி_பயத்தில்திமுக

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், தங்களது தளபதி தொகுதியான கொளத்தூரில் எப்படி அரசு மேல் நிலைப்பள்ளியில் கல்வெட்டு வைக்கலாம் எனக்கூறி கல்வெட்டை அகற்றி விட்டனர்.

மு.க.ஸ்டாலினின் சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திமுகவினர் அகற்றியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

 

சென்னை கொளத்தூர் பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு நீக்கப்பட்டதையடுத்து, #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது .

 

கொளத்தூர் ஜிகே.எம். காலணியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை  புதுப்பித்து ரஜினி மக்கள் மன்ற வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் கடந்த  மாதம் 20ம் தேதி திறந்து வைத்தார். 

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், தங்களது தளபதி தொகுதியான கொளத்தூரில் எப்படி அரசு மேல் நிலைப்பள்ளியில் கல்வெட்டு வைக்கலாம் எனக்கூறி கல்வெட்டை அகற்றி விட்டனர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றத்தினரும் ஆதரவாளர்களும்  ட்விட்டரில்
 #ரஜினி_பயத்தில் திமுக என்கிற ஹேஸ்டாக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஸ்டாக் ட்ரெண்டிங்கில் முதல்டத்தில் உள்ளது.