கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பைக் கேட்டு மரணமடைந்த பள்ளி ஆசிரியர் !  சோகத்தில் மூழ்கிய மாணவிகள்!

 

கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பைக் கேட்டு மரணமடைந்த பள்ளி ஆசிரியர் !  சோகத்தில் மூழ்கிய மாணவிகள்!

தமிழகம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களாக அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல வருடங்களாகவே தமிழக அரசிடம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களாக அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல வருடங்களாகவே தமிழக அரசிடம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மாதம் 15ஆம் தேதி செய்தித்தாள்களில், அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணி நிரந்தரம் செய்வதாகச் செய்தி வந்திருந்தது. அதைப் பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருந்தார்  

died

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளியிலுள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த கார்த்திகேயன்(54). கடந்த சனிக்கிழமையன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தது. பணி நிரந்தரம் செய்யப்படும் என்று பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்து வந்த கார்த்திகேயன் இந்த அறிவிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பள்ளி மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆசிரியர் கார்த்திகேயனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.