கல்விக் கட்டணம் செலுத்தாததால் மாணவியை வெளியேற்றிய பள்ளி: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

 

கல்விக் கட்டணம் செலுத்தாததால் மாணவியை வெளியேற்றிய பள்ளி: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்ததால் மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தாததால் தேனி மாவட்ட தனியார் பள்ளி மாணவி நாட்களுக்கு முன் வெளியேற்றப்பட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப் பட்ட மாணவியை “அனைவருக்கும் கல்வி” என்ற திட்டத்தின் கீழ் அரசே கட்டணத்தை செலுத்தி அதே பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். 

Sengottaiyan tweet

மேலும், தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்ததால் மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகளின்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.