கல்லூரி மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி: நடந்தது என்ன?

 

கல்லூரி மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி: நடந்தது என்ன?

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேடையிலேயே மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அகமதுநகர்: கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேடையிலேயே மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில், வேளாண் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் அரை மணி நேரம் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தேசிய கீதத்துக்காக எழுந்து நின்ற போது தலைச்சுற்றல் ஏற்பட்டது. இருக்கையில் அமர்ந்த அவருக்கு சாக்லெட் ஒன்றை மஹாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் வழங்கினார்.

அதனை சாப்பிட்ட பின் எழுந்து நின்ற. நிதின் கட்கரி கண்கள் செருகிய நிலையில் மயங்கி சரிந்தார். அவரை ஆளுநரும், உடன் பாதுகாப்புக்கு இருந்தவர்களும் இருக்கையில் அமர வைத்தனர். 

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பதிவில், “உடலில் சர்க்கரை லேசானதால் மயக்கம் ஏற்பட்டது. மருத்துவர்களின் உதவியோடு தற்போது நலமாக இருக்கிறேன். நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.