கல்லூரி மாணவிகள் மத்தியில் பாட்டு பாடி மாஸ் காட்டிய துருவ் விக்ரம்!  

 

கல்லூரி மாணவிகள் மத்தியில் பாட்டு பாடி மாஸ் காட்டிய துருவ் விக்ரம்!  

நடிகர் துருவ் விக்ரம் சென்னை கல்லூரி மாணவிகள் மத்தியில் பாட்டுப்பாடி மாஸ் கட்டியுள்ளார் .

கல்லூரி மாணவிகள் மத்தியில் பாட்டு பாடி மாஸ் காட்டிய துருவ் விக்ரம்!  

சென்னை: நடிகர் துருவ் விக்ரம் சென்னை கல்லூரி மாணவிகள் மத்தியில் பாட்டுப்பாடி மாஸ் கட்டியுள்ளார் .

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தில் நாயகனாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில் சமீபத்தில் துருவ் விக்ரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணப் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மாணவிகள் அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது மேடையில் துருவ் மாணவிகளைக் கவரும் வகையில் கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி’ பாடலைப் பாடி அசத்தினார்.

மேலும், தனது தந்தை விக்ரமை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு மாணவிகளிடம் பேசச் செய்துள்ளார்.என்ன தான் துருவ் இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தாலும் இது ஆதித்யா வர்மா படத்திற்கான சரியான புரோமோனேஷனாக அமைந்துள்ளது என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

ஏனென்றால் ஆதித்யா வர்மா படத்தை பெரும்பாலும் இளைஞர்களே பார்க்கவுள்ளதால் மாணவிகளோடு துருவ் கலந்துரையாடியது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.