கல்லூரி மாணவிகளை சீரழித்த பாஜக இணை அமைச்சர்… | தீவிரமாக வீடியோ ஆதாரம்!

 

கல்லூரி மாணவிகளை சீரழித்த பாஜக இணை அமைச்சர்… | தீவிரமாக வீடியோ ஆதாரம்!

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் உள்ள ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியின் தலைவர் சின்மயானந்த்

உத்தர பிரதேசம்: பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் பாஜக-வினரே அதிகளவில் நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளை சீரழித்துள்ளார் என்றும் அவர் மாணவிகளை சீரழித்ததற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன என்றும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chinmayanand

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் உள்ள ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியின் தலைவர் சின்மயானந்த். இவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இணை அமைச்சராக இருந்துள்ளார். இவரின் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் 23 வயது நிரம்பிய மாணவி ஒருவர், சின்மயானந்த் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி கடந்த மாதம் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளிட்டார். இதனையடுத்து வீடியோ வெளியான அடுத்த நாளே, வீடியோவை வெளியிட்ட மாணவி கல்லூரியின் விடுதியில் இருந்து காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், காணாமல் போன அந்த மாணவி 18 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.  

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட மாணவி, கூறியதாவது, “சின்மயானந்த் என்னை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தினார். அதன் பிறகும் கூட ஒருவருடமாக எனக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.இதுதொடர்பாக நான் டெல்லி, லோதி சாலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் டெல்லி போலீசார் என்னுடைய புகாரை ஷாஜகான்பூர் காவல்துறை விசாரிக்க அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இன்னும் ஷாஜகான்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

chinamanand

இதனிடையே நேற்றைய தினம் சிறப்பு புலனாய்வுக் குழு என்னிடம் பல மணி நேரம் விசாரித்தனர். அப்போது சின்மயானந்த் குறித்தும் எனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்தேன். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. என்னுடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போதும் அங்குள்ள போலீசார் அவரையும் மிரட்டியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங்கிடம் இருந்தும் எங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளது. நான் தங்கியிருந்த விடுதி அறைக்கு சீல் வைத்துள்ளனர். என் அறைக்கு எதனால் சீல் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் தங்கியிருந்த அறையை ஊடகங்கள் முன்பாக திறக்க வேண்டும். என்னிடம் சின்மயானந்த் செக்ஸ் தொல்லைகள் கொடுத்ததற்கும், கல்லூரி மாணவிகளை சீரழித்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கியதற்கும்னான ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த வீடியோ ஆதாரங்களை தேவையான நேரத்தில் நிச்சயம் வெளியிடுவேன்.

என்னைப் போலவே, பல பெண்களை, சின்மாயனந்த் சீரழித்துள்ளார். அவர்கள் எத்தனை பேர் என்பதும் எனக்குத் தெரியும். பாதிக்கப்பட்டவர்களில், சின்மயானந்துக்கு எதிராக, துணிந்து போராட முன்வந்திருப்பது நான் மட்டுமே” என அந்த மாணவி கூறினார்.