கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா கார்டு இலவசம்!

 

கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா கார்டு இலவசம்!

கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் 2ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா கார்டு இலவசம்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி முதல் ஏப்ரல் 2021 வரை 4 மாதங்களுக்கு எல்காட் நிறுவனம் மூலமாக விலையில்லா தரவு அட்டைகள் (டேட்டா கார்டு)வழங்க உத்தரவிட்டுள்ளேன். இணையவழி கல்விகற்கும் கல்லூரி மாணவ. மாணவிகளுக்கு தினசரி 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா கார்டு இலவசம்!

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள்,பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு அளிக்கப்படும். அதேபோல் சுயநிதி கல்லூரிகள் மாணவர்கள் உள்பட 9,69, 047 மாணவரக்ளுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா கார்டு அளிக்கப்படும். இலவச டேட்டா கார்டை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேலும் சிறக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.