கல்லூரி மாணவன் மீது துப்பாக்கிச் சூடு: நண்பன் தலைமறைவு..!

 

கல்லூரி மாணவன் மீது துப்பாக்கிச் சூடு: நண்பன் தலைமறைவு..!

முகேஷ் வீட்டினுள் சென்று சிறிது நேரம் ஆனதும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரைச் சேர்ந்த முகேஷ் என்ற கல்லூரி மாணவன் தனது நண்பர் விஜய் வீட்டுக்குச் சென்றுள்ளார். விஜய்யும் முகேஷும் வீட்டினுள் இருந்துள்ளனர். விஜய்யின் அண்ணன் வெளியே கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

Mukesh

முகேஷ் வீட்டினுள் சென்று சிறிது நேரம் ஆனதும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. வெளியே தான் சத்தம் கேட்கிறது என்று எண்ணி விஜய்யின் அண்ணன் உதயா, வெளியே சென்று பார்த்துள்ளார். ஆனால், வெளியே ஏதும் நிகழாததால் வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். 

Gun

அப்போது, நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டு முகேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே கிடப்பதைக் கண்டு உதயா அதிர்ச்சியடைந்துள்ளார். முகேஷின் நண்பன் விஜய் அங்கிருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். உடனே, தகவல் அறிந்து வந்த மக்கள் முகேஷை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்த உதயா விடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜய் கையில் எவ்வாறு துப்பாக்கி கிடைத்தது?” நண்பர்களுக்கிடையே ஏதேனும் பிரச்சனையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய விஜய்யை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.