கல்லூரி மாணவன் சுட்டுக் கொலை : தற்செயலாக நடந்த விபத்து எனக்கூறும் நண்பன்..!

 

கல்லூரி மாணவன் சுட்டுக் கொலை : தற்செயலாக நடந்த விபத்து எனக்கூறும் நண்பன்..!

கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பன் விஜய், முகேஷை துப்பாக்கியால் நெற்றியில் சுட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படிக்கும் முகேஷ், நேற்று முன் தினம் தனது நண்பன் வீட்டிற்கு கேம் விளையாடச் சென்றார். கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பன் விஜய், முகேஷை துப்பாக்கியால் நெற்றியில் சுட்டார்.

Mukesh

முகேஷை சுட்டவுடன் விஜய் அங்கிருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த முகேஷை பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், முகேஷ் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனால், சம்பவம் நடந்த இடத்திலிருந்த விஜய்யின் அண்ணனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

Vijay

அதன் பின்னர், முகேஷை சுட்டுக் கொன்ற விஜய் தானாக வந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதனையடுத்து,விஜய்யை 15 நாட்கள் நீதி மன்ற காவலில் எடுத்து விசாரிக்கும் படி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி, விஜய்யிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் விஜய், அந்த துப்பாக்கி தனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் குப்பைத் தொட்டியில் கிடைத்ததாகவும், முகேஷை சுட்டது தற்செயலாக நடந்த விபத்து என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். விஜய்யிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.