கல்லூரி மாணவன் சுட்டுக் கொலை : கள்ளத்துப்பாக்கி குறித்த பரபரப்பு தகவல்கள்!

 

கல்லூரி மாணவன் சுட்டுக் கொலை : கள்ளத்துப்பாக்கி குறித்த பரபரப்பு தகவல்கள்!

வேங்கட மங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் சில நாட்களுக்கு முன்னர், அவனது நண்பன் விஜய்யால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம். வண்டலூரில் வேங்கட மங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் சில நாட்களுக்கு முன்னர், அவனது நண்பன் விஜய்யால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Mukesh

இதனையடுத்து, விஜய்யைக் கைது செய்த காவல்துறையினர் அவனிடம் நடத்திய  விசாரணையில், அது தற்செயலான விபத்து என்றும் அந்த துப்பாக்கியைக் குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்ததாகவும் கூறினார். அதனை நம்பாத காவல்துறையினர், அவனின் வீட்டின் அருகே விசாரணை செய்ததில் விஜய்க்கு இரண்டு கேங்ஸ்டர் கும்பலுடன் தொடர்பு இருந்ததாகவும், அது கள்ளத்துப்பாக்கி என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. 

Vijay

அதனையடுத்து, தாழம்பூர் காவல்துறையினர் அந்த துப்பாக்கியைப் பற்றி விஜய்யிடம் நடத்திய விசாரணையில், முகேஷை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை நல்லம்பாக்கம் அருகேயுள்ள கல்குவாரியில் பதுக்கி வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். விஜய் கொடுத்த வாக்குமூலத்தை வைரத்து பதுக்கி வைக்கப்பட்ட அந்த துப்பாக்கியை காவல்துறையினர் மீட்டனர். அந்த துப்பாக்கி யாரிடம் இருந்து விஜய்க்குக் கிடைத்தது என்று இன்னும் சரியான தகவல்கள் கிடைக்காததால் விஜய்யிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.