கல்லூரி மாணவன் சுட்டுக் கொலை : கள்ளத்துப்பாக்கியை வைத்துப் போட்டுத் தள்ளிய நண்பன்!

 

கல்லூரி மாணவன் சுட்டுக் கொலை : கள்ளத்துப்பாக்கியை வைத்துப் போட்டுத் தள்ளிய நண்பன்!

அந்த துப்பாக்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனக்குக் குப்பைத் தொட்டியில் கிடைத்ததாகவும், அது எதேர்ச்சியாக நடந்த விபத்து என்றும் வாக்குமூலம் அளித்தார். 

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படிக்கும் நண்பன் முகேஷை கேம் விளையாடுவதில் தகராறு ஏற்பட்டதால் அவனது நண்பன் விஜய் துப்பாக்கியால் முகேஷை சுட்டுக் கொன்றார். முகேஷின் நண்பன் விஜய் தானாக வந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதன் பின்னர் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த துப்பாக்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனக்குக் குப்பைத் தொட்டியில் கிடைத்ததாகவும், அது எதேர்ச்சியாக நடந்த விபத்து என்றும் வாக்குமூலம் அளித்தார். 

Mukesh

அதனை நம்பாத காவல்துறையினர் அவனது வீட்டின் அருகே விசாரணை நடத்தியுள்ளனர். கஞ்சா விற்கும் இரண்டு கேங்ஸ்டர் கும்பலுடன் விஜய்க்குத் தொடர்பு உள்ளதாகவும், ஏற்கனவே ஒருவரைப் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் விஜய் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Vijay

அது மட்டுமின்றி, அந்த கஞ்சா விற்கும் இரண்டு கும்பல்களும் கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா விற்று வருவதாகவும், அவர்கள் அனைவரிடமும் கள்ளத்துப்பாக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இரண்டு கேங்குக்கும் இடையே எப்போதும் யார் கெத்து என்று சண்டை நடக்குமாம்.

Gun

அந்த கள்ளத் துப்பாக்கியை வைத்துத் தான் விஜய் முகேஷை சுட்டுள்ளார். இந்த கேங்ஸ்டர் கும்பல்களை எண்ணி அச்சமடைந்திருக்கும் அப்பகுதி மக்கள் விரைவில் அவர்களைக் கைது செய்யவேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.