கல்லால் அடித்து போலீஸ் மண்டையை உடைத்த இளைஞர்கள்: சென்னையில் பரபரப்பு!
மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் கல்லால் தாக்கி காவலர் ஒருவர் மண்டையை உடைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் கல்லால் தாக்கி காவலர் ஒருவர் மண்டையை உடைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கம் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, கோவில் அருகே அப்பகுதியைச் சேர்ந்த பாஷா, கார்த்திகேயன், சாந்தகுமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். இதை கண்ட இளங்கோவன், அவர்களைத் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமிகள், குடிபோதையில் அருகிலிருந்த கல்லை எடுத்து இளங்கோவின் தலையில் போட்டு சரமாரியாகத் தாக்கினர். இந்த தாக்குதலால் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை கண்ட அப்பகுதி மக்கள், இளங்கோவனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பெருங்களத்தூர் போலீசார் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்துள்ளனர்.