கல்யாண வீட்டில் திடீரென புகுந்து  பாட்டுப் பாடி அசத்திய பாடகர் அந்தோனிதாசன்!   

 

கல்யாண வீட்டில் திடீரென புகுந்து  பாட்டுப் பாடி அசத்திய பாடகர் அந்தோனிதாசன்!   

பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் பாடகர் அந்தோனி தாசன்.

பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் பாடகர் அந்தோனி தாசன். அவரின் பாடல்கள் அனைத்தையும்  எல்லாத்தரப்பு மக்களாலும் விரும்பி கொண்டாடி வருகின்றனர். இவர் தற்போது பிரபல சோனி மியூசிக் நிறுவனத்தில் ஆர்ட்டிஸ்டாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். 

அதன்படி திருமணவிழா, மற்றும் குடும்ப விழாக்களில் யாரும் எதிர்பாராத விதமாக அந்தோனிதாசன் மற்றும் அவரது  டீம் உள்ளே சென்று ஒரு மினி கச்சேரியையே நடத்தும் சுவாரஸ்யமான முயற்சி அது. திருமணவிழா மற்றும் குடும்ப விழாக்களில் யாருக்கும் தெரியாமல் யாரிடமும் தகவல் சொல்லாமல் எதார்த்தமாகச் சென்று அந்தோனி தாசன் ஒரு மினி கச்சேரியை நடத்துகிறார். 

இதை அவர்கள் முதல் முறையாக சென்னையில்  திருமணவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் அரங்கேற்றினார்கள். யாரும் எதிர்பாரா விதமாக அந்தோனி தாசன் மற்றும் அவரது வாத்தியக் குழு சென்று பாட்டுப்பாடியதும், அந்த திருமண விழாவிலிருந்த அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். 

antony

தலைவரின் பேட்ட படத்தில் இடம்பெற்ற ஆஹா கல்யாணம், பாடலையும், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல பாடலையும் அந்தோனி தாசன் பாடி அசத்தியுள்ளார்.  அதுமட்டுமின்றி  நாட்டுப்புறப்பாடல்களையும் அந்தோனி தாசன் பாடியுள்ளார். நாட்டுப்புறப்பாடல்களை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை அந்தத் திருமணவிழாவில் வந்திருந்த விருந்தினர்களின் மகிழ்ச்சியில் காண முடிந்தது.  

antony

 மேலும் இந்தத் திடீர் மினி கச்சேரி மூலமாக எல்லாத்தரப்பு மக்களிடமும் நாட்டுப்புறப் பாடல்கள் சென்றடையும் என்று அவர் நம்புகிறார்.  திருமண விழாவிலும் குடும்ப விழாவிலும் பாடி முடித்ததும் அந்தோனிதாசனை மக்கள் சூழ்ந்து கொண்டாடியுள்ளனர்.  

இது குறித்து  சோனி மியூசிக் நிறுவனத்தின் தமிழக நிர்வாகி அசோக் பர்வானி கூறியதாவது, ‘அந்தோணி தாசன் மாதிரியான திறமையான பாடகர் எங்கள் சோனி நிறுவனத்தோடு இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் நாட்டுப்புறப் பாடல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எங்கள் குழுவின் நோக்கம். அந்தோனி தாசன் மூலமாக ஒரு கலையை அதன் பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ளபடியே சோனி மியூசிக் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது’ என்றார் 

அதைத்தொடர்ந்து அந்தோனி தாசன்  கூறியதாவது, ‘நம் மண்ணோட பாடல்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கான முயற்சியாக சோனி நிறுவனத்தோடு இணைந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.