கல்யாணம் நடந்தா நானே சொல்லுவேன் – நடிகர் சிம்பு அதிரடி

 

கல்யாணம் நடந்தா நானே சொல்லுவேன் – நடிகர் சிம்பு அதிரடி

என் திருமணம் குறித்து சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின்றன. அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

என் திருமணம் குறித்து சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின்றன. அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகர் சிம்பு அவரது தந்தை பார்க்கும் பெண்ணை வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்யப்போவதாகவும். அவர் சினிமா குடும்பத்தை சேர்ந்த ஆனால் படங்களில் நடிக்க ஆர்வமில்லாத பெண்ணாக இருப்பார் என்றும் கிசிகிசு வெளிவந்தது. மேலும் அந்த பெண்ணை டி. ராஜேந்தர் ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  “எனது திரையுலக பயணத்திற்கும், வெற்றிக்கும் ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. மேலும் ரசிகர்கள், பத்திரிக்கையாளர்களின் அன்பும், ஆதரவும் இல்லாவிட்டால் திரையுலகில் பயணித்திருக்க முடியாது. இருப்பினும் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் என்னுடைய தனிப்பட்ட மற்றும் தொழில்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. என் திருமணம் குறித்து பல வதந்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. திருமணம் நடக்கும்போது நானே முறையாக அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார்.