கல்யாணமும் ஆகல; குழந்தையும் இல்ல: இலியான விளக்கம்!

 

கல்யாணமும் ஆகல; குழந்தையும் இல்ல: இலியான விளக்கம்!

நடிகை இலியானாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், கர்ப்பமாக உள்ளதாகவும் வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மும்பை: நடிகை இலியானாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், கர்ப்பமாக உள்ளதாகவும் வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை இலியானா, தமிழில் ‘கேடி’, ‘நண்பன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து பாலிவுட் வாய்ப்பு அவரைத் தேடி வர கடந்த சில மாதங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்தார். தென்னிந்திய படங்களில் ஏதும் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில், ‘அமர் அக்பர் அந்தோணி’ படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் செட்டிலான நடிகை இலியானா ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிஃபோனுடன் காதல் வயப்பட்டு, ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாகவும், அவர் கர்ப்பமாக உள்ளதாகவும் செய்திகள் பரவின.

ileana

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இலியானா, ’20 வயதில் நடிக்க வந்தேன். தற்போது எனக்கு 32 வயதாகிறது. திரைப்படங்களில் மட்டும் தான் எனது கவனம் உள்ளது. எனக்கு திருமணமும் ஆகவில்லை. நான் கர்ப்பமாகவும் இல்லை. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிறகு நான் மனதளவில் வலுவாகிவிட்டேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.

ஒல்லி பெல்லியாக ஜீரோ சைஸில் இருந்த இலியானா தற்போது சற்று எடை கூடியிருப்பதால், ரகசிய திருமணத்தை தொடர்ந்து இலியானா கர்ப்பமாகியதாக செய்திகள் பரவியிருக்கலாம் என தெரிகிறது.