கல்யாணத்துக்கு முன்னால ஆண்கள் சிங்கம் தான்! ஆனா… அதுக்கப்புறமா…? ‘தல’ தோனியின் கலகல பேச்சு!

 

கல்யாணத்துக்கு முன்னால ஆண்கள் சிங்கம் தான்! ஆனா… அதுக்கப்புறமா…? ‘தல’ தோனியின் கலகல பேச்சு!

சென்னையில் பாரத் மேட்ரிமோனி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மகேந்திர சிங் தோனி நேற்று பங்கேற்று பேசும் போது, தன் மனைவி பற்றியும், காதல் பற்றியும் மனம் திறந்து பேசினார். 
வீட்டில் என் மனைவி சாக்‌ஷி சொல்வது தான் நடக்கும். இதுவரையில் அவருடைய நிர்வாகத்தில் எந்த விஷயத்திலும் நான் தலையிட்டது கிடையாது. அவர் சொல்ற அனைத்து விஷயங்களுக்கும் ஆம், சரி எனும் வார்த்தைகளை மட்டுமே நான் உச்சரித்தால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார்.

சென்னையில் பாரத் மேட்ரிமோனி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மகேந்திர சிங் தோனி நேற்று பங்கேற்று பேசும் போது, தன் மனைவி பற்றியும், காதல் பற்றியும் மனம் திறந்து பேசினார். 

dhoni

வீட்டில் என் மனைவி சாக்‌ஷி சொல்வது தான் நடக்கும். இதுவரையில் அவருடைய நிர்வாகத்தில் எந்த விஷயத்திலும் நான் தலையிட்டது கிடையாது. அவர் சொல்ற அனைத்து விஷயங்களுக்கும் ஆம், சரி எனும் வார்த்தைகளை மட்டுமே நான் உச்சரித்தால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். இதில் முக்கியமான என் மனைவி சந்தோஷமாக இருந்தால் தான் என்னால் சந்தோஷமாக இருக்க முடியும். 
எல்லா ஆண்களுமே கல்யாணத்துக்கு முன்னாடி சிங்கம் போல இருந்திருக்கலாம்.

dhoni and sakshi

ஆனால் கல்யாணத்திற்கு பிறகு எல்லாமே மாறி விடுகிறது. வயசான காலத்தில் தான் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே இருக்கும் உறவு பலப்படுகிறது. கல்யாணத்தின் உண்மையான தாத்பரியத்தையே நாம் நமது 50 வயதைக் கடந்த பின்னர் தான் உணர முடியும். உங்களுக்கு 55 வயது ஆகும் போது தான் உங்களால் காதலின் உண்மையான வயது என்ன என்று கூற முடியும் என்று  தோனி கலகலப்பாக பேசினார்.