“கல்யாணத்துக்கு முன்னாடியே அவன பத்தி தெரிஞ்சதே சந்தோஷப்படு” தர்ஷன் குறித்து காஜல் விமர்சனம்!
காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது தர்ஷன் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக சனம் ஷெட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சனம் ஷெட்டி – தர்ஷன் செய்தி தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது. காரணம் தன்னை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது தர்ஷன் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக சனம் ஷெட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் இது குறித்து பேசிய தர்ஷன், சனம் ஷெட்டி அவரின் முன்னாள் காதலருடன் நான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது நெருக்கமாக இருந்துள்ளார்.அதனால் அவரை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றார். தற்போது இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
True dat! Poor gal. She must be happy for one reason cos She gotta know his attitude before marriage. This would have been even more worse to accept, had it happened after marriage. May god help them. This is a blessing in disguise. https://t.co/DmAGd6qrOp
— Kaajal Pasupathi (@kaajalActress) February 3, 2020
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருடன் நடிகையுமான காஜல் பசுபதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘சனம் ஷெட்டி ஒரு விஷயத்திற்கு சந்தோஷப்பட வேண்டும். காரணம் திருமணத்திற்கு முன்பே அவரை பற்றி தெரிந்துவிட்டது. திருமணத்திற்குப் பிறகு தெரிந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வது இன்னும் மோசமாக இருந்திருக்கும். கடவும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். காஜலின் இந்த டீவீட்டால் தர்ஷன் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.