“கல்யாணத்துக்கு பொண்ணே கிடைக்கல…” விரக்தியில் டிரான்ஸ்பார்மரை பிடித்து தொங்கிய இளைஞர் பரிதாப பலி!

 

“கல்யாணத்துக்கு பொண்ணே கிடைக்கல…” விரக்தியில் டிரான்ஸ்பார்மரை  பிடித்து தொங்கிய இளைஞர் பரிதாப பலி!

மணிகண்டன் கடந்த சில நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஆண்டாஞ்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன்சேர்ந்த இளைஞர் மணிகண்டன். கூலி தொழில் செய்துவரும் மணிகண்டனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ttn

அவரது குடும்பத்தார் அவருக்கு திருமணத்திற்காகப் பெண் தேடி வந்துள்ளனர். ஆனால்  மணிகண்டனுக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் மணிகண்டன் கடந்த சில நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

ttn

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வீட்டின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி, அதில் உள்ள மின்கம்பியை பிடித்து தொங்கியுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.