கலைஞர் அரங்கில் தற்காலிக கொரோனா தனிமை முகாம்! – முன்வந்து மனு அளித்த தி.மு.க

 

கலைஞர் அரங்கில் தற்காலிக கொரோனா தனிமை முகாம்! – முன்வந்து மனு அளித்த தி.மு.க

தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வழங்கியுள்ளனர். இதுதவிர தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெருமளவு நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வழங்கியுள்ளனர். மேலும், பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கை தனிமை முகாம் அமைக்க பயன்படுத்திக்கொள்ள தி.மு.க அனுமதி அளித்துள்ளது.
தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வழங்கியுள்ளனர். இதுதவிர தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெருமளவு நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வழங்கியுள்ளனர். மேலும், பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

Dmk letter

இந்த நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கை தற்காலிகமாக கொரோனா தனிமை முகாமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து இதற்கான ஒப்புதல் மனுவை தி.மு.க நிர்வாகிகள் அளித்துள்ளனர்.