கலைக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு முடிவை ஏற்கக் கூடாது! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

 

கலைக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு முடிவை ஏற்கக் கூடாது! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தேசிய அளவில் இளநிலை மற்றும் முதுநிலை கலை – அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற ஹரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி. குஹாத் தலைமையிலான குழுவின் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கக்கூடாது!

கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை யுஜிசி ஏற்கக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ramadoss-45

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தேசிய அளவில் இளநிலை மற்றும் முதுநிலை கலை – அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற ஹரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி. குஹாத் தலைமையிலான குழுவின் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கக்கூடாது!

கொரோனா பாதிப்பு சூழலில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குஹாத் குழு, பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பது அதிகார வரம்பு மீறிய செயலாகும். இது கண்டிக்கத்தக்கது!

கொரோனா பாதிப்பால் பல மாநிலங்களிலும், சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளிலும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் வாடும் நிலையில் எந்த நுழைவுத்தேர்வும் தேவையில்லை; நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “தமிழ்நாட்டில் பயிற்சியில் உள்ள 8500 காவலர்களை உடனடியாக பணியில் சேர தமிழக அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களில் பெரும்பான்மையினரை சென்னையில் ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்!” என்று கூறியுள்ளார்.