கலெக்டர் வரை கவனிக்கிறாங்க… வி.ஓ.ஏ-வை மிரட்டிய பெண் ஆர்.ஐ! – வைரல் ஆடியோ

 

கலெக்டர் வரை கவனிக்கிறாங்க… வி.ஓ.ஏ-வை மிரட்டிய பெண் ஆர்.ஐ! – வைரல் ஆடியோ

மணல் கடத்தல் லாரியை மடக்கிப் பிடித்த வி.ஏ.ஓ-வை பெண் வருவாய் ஆய்வாளர் மிரட்டியதுபோன்ற ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காட்டூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக். கடந்த 24ம் தேதி அப்பகுதியாக அனுமதியின்றி மணல் கடத்தி சென்ற லாரியை இவர் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்துகொண்டிருந்தார்

மணல் கடத்தல் லாரியை மடக்கிப் பிடித்த வி.ஏ.ஓ-வை பெண் வருவாய் ஆய்வாளர் மிரட்டியதுபோன்ற ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காட்டூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக். கடந்த 24ம் தேதி அப்பகுதியாக அனுமதியின்றி மணல் கடத்தி சென்ற லாரியை இவர் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்துகொண்டிருந்தார்.

 

உடனடியாக லாரி டிரைவர் யாரிடமோ போன் செய்து பேசியுள்ளார். ஒரு சில நிமிடங்களில் வி.ஏ.ஓ கார்த்திக் செல்போன் எண்ணில் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி வந்து பேசினார். இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஈஸ்வரி (வருவாய் ஆய்வாளர்): ஹலோ…
கார்த்திக் (வி.ஏ.ஓ): சொல்லுங்க மேடம்.
ஈஸ்வரி: நீங்க ஏதோ வண்டியை பிடிச்சி வச்சிருக்கீங்களாமே?
கார்த்திக்: எந்த வண்டி மேடம்?
ஈஸ்வரி: நீங்கதான காட்டூர் வி.ஏ.ஓ?
கார்த்திக்: ஆமா நான்தான் பிடிச்சி வச்சிருக்கேன்.
ஈஸ்வரி: எதுக்கு? ஏன் இதுவரைக்கும் எனக்கு இன்ஃபார்ம் செய்யலை?
கார்த்திக்: இப்பத்தான் பிடிச்சேன். பார்த்துட்டுதான் சொல்ல முடியும் கரக்டா இருக்கான்னு…
ஈஸ்வரி: அவங்க எல்லாம் பர்மிட்டோடதான் ஓட்டிக்கிட்டு இருக்காங்க.
கார்த்திக்: பர்மிட் கரெக்ட்டா இல்லைங்க, அடிச்சு எழுதியிருக்காங்க.
ஈஸ்வரி:  இல்ல, ஒரு விஷயம் சொல்றே கேளுங்க. அவங்க தாசில்தாரு கலெக்டரு எல்லாரும் வரையிலும் அவங்க பார்க்குறாங்க. நீங்க எப்படி ரிப்போர்ட் பண்ணுவீங்க?
கார்த்திக்: மேடம் உங்களுக்கு என்ன பார்த்துருக்காங்க?
அப்போது வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி ஏதோ சொல்கிறார்…
கார்த்திக்: என்ன மேம் சொல்றீங்க, அவங்கள பிடிச்சிருக்கேன் பர்மிட் தப்பு.
ஈஸ்வரி:  என்ன பண்ணுவீங்க நீங்க, எப்படி அப்ளை பண்ணுவீங்க சொல்லுங்க, எப்படி மேலிடத்தில தெரிவிப்பீங்க சொல்லுங்க? ஆர்ஐ-க்கு இதுவரைக்கும் நீங்க எதுக்கு கூப்புட்டு சொல்லல. சரி நீங்க எப்படி அப்ளை பண்ணுவீங்க. மணியார்டர் ஃபில் பண்ணியிருக்காருனு சொல்லி ரிப்போர்ட் போடுவீங்களா?
கார்த்திக்: பண்ணலாம் மேடம். ஏன் சப் கலெக்டருக்கு கொண்டுபோகக்கூடாதுங்களா?
ஈஸ்வரி:  அப்படியெல்லாம் இல்லையே! ஆர்ஐ பார்க்கணும்.
கார்த்திக்: ஏ… வந்து பாருங்க.
ஈஸ்வரி:  அது எப்படி நான் கேட்டு தெரிஞ்சு பார்க்கணுமா?
கார்த்திக்: இப்பதா மேடம் கரெக்டானு பார்த்துட்டு உங்கள கூப்புட முடியும்.
ஈஸ்வரி:  நீங்க எதுனாலும் எனக்கு ஒருதடவ இன்ஃபார்ம் பண்ணமாட்றீங்க.
கார்த்திக்: இப்பதான் மேடம் பார்த்துட்டு இருக்கோம். பார்த்துட்டுதான் உங்களை கூப்புடுவோம்.
ஈஸ்வரி:  தாசில்தார் மொதகொண்டு கலெக்டர் வரை அவங்க கவனிச்சிட்டு இருக்காங்க.
கார்த்திக்: கவனிச்சிட்டு இருக்காங்களா! என்ன மேம் பர்மிட் தப்பா இருக்குது.
ஈஸ்வரி:  பர்மிட் தப்பா இருந்தா உங்களுக்கு என்னங்க… (ஏதோ சொல்லவருகிறார்). மணியக்காரரு (வி.ஏ.ஓ.) சீஸ் பண்ணலாம்னு எங்கங்க இருக்குது?
கார்த்திக்: அப்பறோம் வேற யார பிடிக்கலாமுங்க?
ஈஸ்வரி:  ஆர்ஐ-க்குதான் சீஸ் பண்ணுற அதிகாரம் இருக்குங்க.
கார்த்திக்: அப்ப வாங்க வந்து பிடிங்க!
ஈஸ்வரி:  நீங்க சொல்லி நா ஏன் பிடிக்கணும்? நா பார்த்துக்குறேன் என்னோட ஏரியாவுக்கு வரப்ப…
கார்த்திக்: ஒங்க ஏரியா எதுங்க?
ஈஸ்வரி:  நா கண்ணுல பார்க்குறப்ப நா பிடிச்சுக்குறேன்.
கார்த்திக்: ஆக்சுவலா காட்டூர் உங்க கட்டுப்பாட்டுலதான இருக்கு.
ஈஸ்வரி:  நா கண்ணு பார்க்குறப்ப நா பிடிச்சுக்குறேன் சரிங்களா. (என்று சொல்லி செல்லிடைப்பேசி அழைப்பு அணைக்கிறார்).