கலாச்சாரத்தை தூண்டி சாக்ஷியை டார்கெட் செய்த மீரா மிதுன்! 

 

கலாச்சாரத்தை தூண்டி சாக்ஷியை டார்கெட் செய்த மீரா மிதுன்! 

பிக் பாஸ் 3யில் 33வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யில் 33வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்து விட்டில் கலவரத்தை உண்டு செய்வது மீரா மிதுன். எதற்கு எடுத்தாலும் கோபம் கொள்வது அடுத்தவர்கள் சொல்ல வரும் கருத்தைக் கேட்காமல், வின் வம்பு இழுப்பதால் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி மக்கள் மனதிலும் வெறுப்பை சம்பாதித்துள்ளார். நேற்று இவரின் வலையில் சிக்கியது சேரன். 

அதைத்தொடர்ந்து இன்று இவர் வீட்டில் கலாச்சாரம் என்பது மூலம் புதிதாக ஒரு பூகம்பத்தை கிளப்பியுள்ளார். அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் மீரா, ‘நடிப்புக்கு இந்த இடத்தில் மொழி தேவையில்லை. ஊமையாக இருக்க வங்க கூட நடிக்கலாம். எல்லார்க்கும் அவங்கவங்க ஒப்பீனியன் சொல்ல நியாயம் இருக்கு, ஆனா 5 வாரமா எந்த தப்பும் செய்யாத என்ன நாமினேட் பண்றிங்க நான் எதாச்சி கேட்குறனா?  என்று மிகவும் ஆவேசமாகப் பேசுகிறார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாக்ஷி, ‘shut up… எனக்கு இந்த இடத்துல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தனும். தயவு செய்து இங்க cultural difference கொண்டு வராதீங்க.. என்னால அது ஏத்துக்க முடியாது’ என்று சொல்லிவிட்டு வழக்கம் போல் கோபமாகப் பேசிவிட்டு வெளியே சென்று அழுக ஆரம்பித்து விடுகிறார். உடனே அவரின் உயிர் தோழி ஷெரின்யும் கூடவே சென்று சம்மந்தமே இல்லாமல் அழுகிறார். இதை கண்ட சக ஹவுஸ் மேட்ஸ் அவர்களைச் சமாதானம் செய்ய முயற்சிப்பது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.