கலப்பட மருந்தால் இந்தியாவில் பாதிப்பு! அதிர்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர்!

 

கலப்பட மருந்தால் இந்தியாவில் பாதிப்பு! அதிர்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர்!

கலப்பட மருந்தால் வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் உடல் முழுவதும் உரோம வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஸ்பெயினில் 17 ஆக அதிகரித்துள்ள நிலையில் சர்ச்சைக்குரிய மருந்து இந்தியாவிலும் விற்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  இந்நோயால் உடலில் அபரிமிதமான விகிதத்தில் ரோமங்களின் வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கலப்பட மருந்தால் வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் உடல் முழுவதும் உரோம வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஸ்பெயினில் 17 ஆக அதிகரித்துள்ள நிலையில் சர்ச்சைக்குரிய மருந்து இந்தியாவிலும் விற்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  இந்நோயால் உடலில் அபரிமிதமான விகிதத்தில் ரோமங்களின் வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

medicine

ஸ்பெயினின் மலாகாவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஃபார்மா-குய்மிகா சுர் எஸ்.எல். என்ற நிறுவனம் மருந்துக் கலப்பட சர்ச்சையில் சிக்கி உரிமத்தை இழந்துள்ளது. ஒமர்ப்ரஸோல் என்ற ஜீரண குறைப்பாட்டை சரி செய்யும் மாத்திரையில், மைனாக்ஸிடில் எனும் வழுக்கை, முடி வளர்ச்சிக் குறைபாட்டை சரிசெய்யும் மூலக்கூறை கலந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஜூன் மாதத்தில் ஸ்பெயினில் கான்டபரியா, ஆண்டலூசியா உள்ளிட்ட நகரங்களில் 13 குழந்தைகளுக்கு வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் நோய் தாக்கியுள்ளது.

child

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் ஃபார்மா-குய்மிகா சுர் எஸ்.எல். நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு உரிமம், ஏற்றுமதி, இறக்குமதி உரிமம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆண்டலூசியா பகுதியில் 50 மருந்தகங்களில் 30 பேட்ஜ்கள் வரை மருந்து திரும்பப் பெறப்படாத நிலையில், மக்கள் எச்சரிக்கையோடு அந்த வகை மருந்துகளை பயன்படுத்துமாறு ஸ்பெயின் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. க்ரனடா ஹோய் என்ற நிறுவனத் தகவல்படி, அந்த மருந்துக்கு இந்தியாவிலும் ஒரு விநியோகஸ்தர் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரையில் யாரும் இது குறித்து புகார் தெரிவிக்காத நிலையில், பெற்றோர்களின் மத்தியில் கலப்பட மருந்துகளினால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.