கலப்பட எண்ணெய் விளம்பரத்தில் நடித்த கள்ளங்கபடமற்ற அஞ்சலி மீது புகார் !

 

கலப்பட எண்ணெய் விளம்பரத்தில் நடித்த கள்ளங்கபடமற்ற அஞ்சலி மீது புகார் !

கலப்பட எண்ணெய் விளம்பரத்தில் நடித்ததாக கூறி நடிகை அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் ஸ்ரீ அன்னபூர்ணா நிறுவனம் தயாரிக்கும் எண்ணெயில் கலப்படம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கலப்பட எண்ணெய் தயாரிக்கும் ஸ்ரீ அன்னபூர்ணா நிறுவனம் மீதும் அந்த எண்ணெய்யை பிரபலப்படுத்த விளம்பரங்களில் நடித்த நடிகை அஞ்சலி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுடர் பார்வை மக்கள் இயக்கத்தினர், கோவை சுகாதாரபணித் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

anjali

இதுகுறித்து சுடர் பார்வை இயக்கத்தின் பாலாஜி அளித்த பேட்டியில், ’ஈரோடு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் கலப்படம் செய்வதாக தெரிய வந்ததை அடுத்து, அந்த எண்ணெயை கேரளாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் அந்த எண்ணெயில் சேர்க்கப்பட்டதாக தெரிவித்த சிலப் பொருட்கள் சேர்க்கபடவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் மீதும், தரமற்ற பொருட்களுக்கு விளம்பரத்தில் நடித்த நடிகை அஞ்சலி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதார பணித்துறையிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். அன்னபூர்ணா நிறுவனத்தில் எண்ணெயில் என்ன போடுகிறார்காள்? போடாமல் இருக்கிறார்கள்? கலப்படம் செய்கிறார்களா? இல்லையா என கவனித்து விட்டா விளம்பரத்தில் நடிக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள் நடிகை அஞ்சலியின் கோடான கோடி ரசிகர்கள் !