கற்பூரம் ஏற்றிய சிறுமி கற்பழிப்பு -கோயிலில் கடத்தி, காட்டில் கிடத்தி – இரவு முழுவதும் உறவு கொண்ட சிறுவர்கள்…

 

கற்பூரம் ஏற்றிய சிறுமி கற்பழிப்பு -கோயிலில் கடத்தி, காட்டில் கிடத்தி – இரவு முழுவதும் உறவு கொண்ட சிறுவர்கள்…

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் பிப்ரவரி 19 ன் தேதி இரவு, 14 வயது சிறுபான்மை சிறுமி தோழியோடு கற்பூரமேற்றி ,விளக்கு வைத்து சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து, அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கோயிலுக்கு போன 14 வயது சிறுமியை கடத்திக்கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்த மைனர் சிறுவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர் .

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் பிப்ரவரி 19-ம் தேதி இரவு, 14 வயது சிறுபான்மை சிறுமி தோழியோடு கற்பூரமேற்றி ,விளக்கு வைத்து சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து ,அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றனர். அந்த காட்டுக்குள் சில மைனர் சிறுவர்கள் உள்பட பலர் அந்த சிறுமி யை பாலியல் பலாத்காரம் செய்தனர் .பிறகு அதிகாலையில் அவரை அந்த காட்டு பகுதியிலேயே  விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர் . 

இதை அந்த சிறுமியோடு உடன் வந்த ஒரு தோழி பார்த்து ,அவர்களிடமிருந்து தப்பித்து, பதறியடித்து அவரின் குடும்பத்தினரிடம் கூற, அவர்கள்  அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில்  அந்த சிறுபான்மை சிறுமியை பலாத்காரம் செய்த மைனர் சிறுவர்கள் உட்பட மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில்   அக்கறையின்மை மற்றும் அலட்சியம் காட்டியதாக பொதுமக்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் புகார் கூறியதையடுத்து அதிகாரிகள்  சில போலீசாரை பணி இடைநீக்கம் செய்தனர்.