கற்பழிப்பு முயற்சியில் தோல்வியுற்ற கயவர்கள் – புகார் கொடுத்ததால் பொங்கியெழுந்து தலித் பெண் மீது துப்பாக்கி சூடு
பீகாரில் செவ்வாய்க்கிழமை இரவு மாவட்டத்தின் ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது, அப்பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சிக்குப் பின்னர் பதட்டங்கள் அதிகரிப்பதைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போலீஸ் படை அங்கு முகாமிட்டுள்ளது
பீகாரில் செவ்வாய்க்கிழமை இரவு மாவட்டத்தின் ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது, அப்பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சிக்குப் பின்னர் பதட்டங்கள் அதிகரிப்பதைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போலீஸ் படை அங்கு முகாமிட்டுள்ளது
ரோஹ்தாஸ் மாவட்ட கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒரு இளம் தலித் பெண் அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களால் சுடப்பட்டார், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு மாவட்டத்தின் ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலிசார் புதன்கிழமை தெரிவித்தனர்
குற்றம் சாட்டப்பட்ட ஜாபர் கான், ஃபாரூக் கான், ஷார்புக் கான் மற்றும் பலர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு ரோஹ்தாஸ் சத்வீவர் சிங் தெரிவித்தார். சசாரத்தின் துணை பிரதேச காவல்துறை அதிகாரி ராஜ்குமார் கூறுகையில், “20 வயது இளம் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்திய நான்கு பேரும் , அவர்கள் பத்திரிகையாளர்கள் எனக் கூறி அந்தப் பெண்ணுடன் நேர்காணல் கோரினர்.
அபெண் வந்ததும், அவர்களில் ஒருவர் பெண்ணின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
“பெண்ணின் கழுத்தின் பக்கவாட்டில் புல்லட் துளைத்தது, அவர் போலீசாரால் உள்ளூர் பி.எச்.சிக்கு கொண்டு செல்லப்பட்டார் அவருக்கு உடனே அறுவை சிகிச்சை தேவைப்பட்டது, எனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் அவரது நிலை சீராக உள்ளது, “என்று SDPO கூறியது.
தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.