கர்ப்பிணி மனைவிக்காக தரையில் மண்டிபோட்டு நாற்காலியாக மாறிய கணவன் : வியக்கவைக்கும் காட்சி!

 

கர்ப்பிணி மனைவிக்காக தரையில் மண்டிபோட்டு நாற்காலியாக மாறிய கணவன் : வியக்கவைக்கும் காட்சி!

மருத்துவரை பார்ப்பதற்காக நெடு நேரம் நின்றுகொண்டே காத்திருந்துள்ளனர். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் பரிசோதனை செய்வதற்கு காக்க வேண்டியதாகியுள்ளது.

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் வசிக்கும் நபர் ஒருவர், அவரது கர்ப்பிணி மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவரை பார்ப்பதற்காக நெடு நேரம் நின்றுகொண்டே காத்திருந்துள்ளனர். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் பரிசோதனை செய்வதற்கு காக்க வேண்டியதாகியுள்ளது. இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அந்த பெண்ணுக்கு கால்வலி வந்து நிற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

ttn

அங்கு நாற்காலிகள் இருந்தும், அனைத்தும் நிரம்பி இருந்துள்ளன. கர்ப்பிணி பெண்ணுக்கு நாற்காலியை விடுவதற்கு யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், மனைவியின் கால் வலியை புரிந்த கணவன் தானே நாற்காலியாக மாறியுள்ளார். தரையில் மண்டி போட்ட அந்த நபர் நாற்காலியாக மாறி, மனைவியை தன் மீது உட்கார வைத்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள், மனைவி மீது அவர் வைத்திருந்த பாசத்தில் திகைத்து நின்றுள்ளனர். இதன் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.