கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை: விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்; திருவள்ளூரில் பரபரப்பு!?

 

கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை: விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்; திருவள்ளூரில் பரபரப்பு!?

கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்: கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

mariage

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மகள் சசிகலாவுக்கும்  வேண்பாக்கத்தை சேர்ந்த துறைமுக ஊழியரான கணேசன் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஆறு மாத காலம் ஆன  நிலையில் சசிகலா 2 மாதம்  கர்ப்பமாக இருந்துள்ளார். 

suicide

இந்நிலையில் கணேசன் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு வீடு திரும்பிய நிலையில் சசிகலா படுக்கை அறையில் பிணமாக தொங்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணேசன் சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.  

​    ​police

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதைத் தொடர்ந்து சசிகலாவின் குடும்பத்தினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே அவரது மரணத்திற்கான  காரணம் தெரியவரும்.

திருமணமான ஆறு மாதத்தில் வயிற்றில் குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.