”கர்ப்பிணியாக இருந்த மகள்’.. ஆசிட் வீசி கடத்திச் சென்ற கொடூர தந்தை !

 

”கர்ப்பிணியாக இருந்த மகள்’.. ஆசிட் வீசி கடத்திச் சென்ற கொடூர தந்தை !

சாய்குமாரும் தீபிகாவும் திருமணம் செய்து கொள்ள அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்புதல் கேட்ட நிலையில், தீபிகாவின் தந்தை பாலகுமார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி- பாக்கியலட்சுமி தம்பதிக்கு சாய்குமார் என்ற மகன் உள்ளார். சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த சாய்குமார், அவருடன் பணிபுரிந்த தீபிகா என்னும் பெண்ணை காதலித்துள்ளார். சாய்குமாரும் தீபிகாவும் திருமணம் செய்து கொள்ள அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்புதல் கேட்ட நிலையில், தீபிகாவின் தந்தை பாலகுமார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

ttn

அதனால் கடந்த ஜூன் மாதம் தீபிகா வீட்டை விட்டு வெளியேறி பெங்களூரில் வைத்து சாய் குமாரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு பேரும் மீண்டும் சாய்குமாரின் வீட்டுக்கு சென்று அங்கு வசித்து வருகின்றனர். தீபிகா தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். 

ttn

இந்நிலையில் தீபிகாவை பார்க்க வேண்டும் என்று கூறி வீட்டுக்கு அவரது வீட்டுக்கு சென்ற பாலகுமார், ஆள் இல்லாத நேரமாய் பார்த்து அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால், தீபிகா அதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலகுமார் ஆசிட் போன்ற பொருளை தீபிகாவின் முகத்தில் அடித்து விட்டு, அங்கிருந்து அவரை கடத்தி சென்றுள்ளார். அதற்கு பாலகுமாருடன் சென்ற நபர்கள் அதற்கு உதவி செய்துள்ளனர். 

ttn

இது குறித்து சாய்குமாரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்ததை எப்படியோ தெரிந்து கொண்ட பாலகுமார், தீபிகாவை வழியிலேயே இறக்கி விட்டு சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலகுமாரையும் அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர்.