கர்ப்பமாக இருக்கும் போது கூட படுக்கைக்கு அழைத்தார்கள்: திரையுலகை அதிர வைத்த பிரபல நடிகை?!

 

கர்ப்பமாக இருக்கும் போது  கூட படுக்கைக்கு அழைத்தார்கள்: திரையுலகை அதிர வைத்த  பிரபல நடிகை?!

தமிழில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இவர்  வெடி, வேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களை மனதை கவர்ந்தார்

தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

sameeraa

தமிழில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இவர்  வெடி, வேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களை மனதை கவர்ந்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே  2014-ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்துகொண்டு சமீரா செட்டிலாகிவிட்டார். அவருக்கு ஹன்ஸ் வர்தே என்றொரு மகன் இருக்கிறார். தற்போது தன் இரண்டாவது குழந்தையை பிரசவிக்கக் காத்திருக்கிறார்  சமீரா.

sameera

இந்நிலையில் சமீபத்தில் இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், சினிமா துறையின் முகத்திரையை தன்  பங்குக்கு கிழித்துள்ளார். அதில், ‘நான் இந்த திரையுலகை விட்டு ஏன்  விலகினேன் என்பதை ஒருவர் கூட தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இங்கு நிலைமை சரியாக இல்லை.

sameeraa

என்னை  சினிமா வாய்ப்புக்காகப் பலபேர் படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட இந்த அவலம் தொடர்ந்தது. இது போன்ற சூழ்நிலை மாறினால் நன்றாக இருக்கும். அது மெதுமெதுவாக நடக்கும் என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.  சமீரா ரெட்டியின் இந்த குற்றச்சாட்டுத்  திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.