கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது

 

கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல நிதி நிறுனத்துக்கு எதிராக பொருளாதார அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணையில் இருந்து காப்பாற்ற அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ 18 கோடி மதிப்பிலான 57 கிலோ தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றதாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்தார்.

தொடர்ந்து  ஜனார்த்தன ரெட்டி பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். காவல்துறையினர் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான ஜனார்த்தன ரெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.